இந்த மாத செய்தி

                                                                                                                   "அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து,
                                                                                                  சீயோனிலே 
தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள்."
                                                                                                                                                                                                           சங்கீதம் 84:7

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

மீட்பர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வாழ்த்துகிறேன்.

"அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து' என்று கூறப்பட்ட வார்த்தைகள் நமது வாழ்வில் நடைபெற வேண்டும் என்றால் சத்திய வேதத்தில் கூறப்பட்டுள்ள காரியங்களைச் செய்வதற்கு நம்மை ஒப்புக் கொடுக்க வேண்டும். எனக்குச் சம்பாதிக்க சக்தி இல்லையே, எனது வியாபாரத்தின் நஷ்டத்தினால் பெலன்குன்றி விட்டேனே, எனது அருமை பிள்ளைகள் என்னை ஏமாற்றி என்னைக் கூனிக் குறுக வைத்து, என் பெலத்தை அவர்கள் செய்கை பறித்து விட்டதே, நான் எப்படி வாழ்வேன், வாழ்வதற்கு எனக்குத் தெம்பு இல்லையே, பிழைப்பதற்குப் போதுமான சக்தி இல்லையே, நான் என்ன செய்வேன் என்று ஏங்குகிற ஒவ்வொரு மக்களையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பார்த்து, "கலங்காதே திகையாதே, நான் உன்னைப் பெலப்படுத்துவேன்" என்று கூறுகிறார். ஆம், இந்த மெய்யான ஆறுதலின் வார்த்தை எனது வாழ்வில் நடைபெறுமா? என்று சந்தேகியாது, சொல்லப்படும் ஆலோசனைகளுக்கு உனது மனதைத் திருப்பு. ஆவி, ஆத்துமா, சரீரத்தில் பெலன் அடைவாய், ஆசீர்வதிக்கப்படுவாய்.

1. கர்த்தருக்குக் காத்திருப்பவர்கள் பெலனடைவார்கள்

"கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்..."
ஏசாயா 40:31

இந்தக் காலம் துரிதமான காலம். எதைச் செய்தாலும் எங்கு சென்றாலும் உடனடியாக முடிவு தெரியவேண்டும். அதுவும் தனக்குப் பிடித்தமான பிரகாரம் அது நடைபெற வேண்டும் என்று விரும்பி, முயற்சி செய்கிற காலம். தாங்கள் வாஞ்சித்த காரியத்தில் காலதாமத விடுகிறார்கள். மானால் உடனே பெலன் குன்றிப் போவார்கள். சிலர் இந்தக் காலத்தில் காத்திராது தங்கள் சுயநீதியைச் சார்ந்து பாவத்தை செய்து

சிலர் தங்களுக்கு தங்கள் ஊதியத்தில் வரவேண்டிய பாக்கித் தொகைக்குக் கணக்குப் பார்த்து, மனுச் செய்வார்கள். இத்தொகை அவர்கள் குறித்த காலத்தில் வந்துவிடும் என்று அதற்குக் காத்திராது, ஈடான தொகையை மற்றவர்களிடம் கடனாகவோ, கை மாற்றாகவோ வாங்கிச் செலவு செய்து விடுவார்கள். தாங்கள் போட்ட கணக்கில் தவறு ஏற்பட்டு ஊதியப்பாக்கித் தொகை சற்று குறைவு படுமானால் அவதி அடைகிறார்கள். சிலர் இதற்காக தங்கள் அலுவலகப் பணியாளருடன் சண்டையிடுவதும் உண்டு. இவ்வாறு மனிதன் தனது காரியங்கள் சீக்கிரம் நடைபெற வகை தேடி, அதில் தோல்வி அடையும்போது சோர்ந்து போகிறான். ஆவியில் பெலன் குற்றி காணப்படுகிறான்.

சிலர் தங்கள் மருத்துவர் கொடுத்த மருந்தை சாப்பிட்டும் வியாதி நீங்கவில்லை என்றால், அதிக கவலை அடைந்து பெலன் குன்றி கலங்கி விடுகிறார்கள். ஆனால் சத்திய வேதம் நாம் புதுப்பெலன் அடைய வேண்டும் என்றால் கர்த்தருக்குக் காத்திருக்க வேண்டும் என்று கூறுகிறது. நாம் ஒரு மரத்தை நட்டு வளர்ப்போம் என்று வைத்துக் கொள்வோம். அந்த மரம் வளர்ந்து, பூத்து பிஞ்சி பிடித்து,காயாகி, முற்றிய பின்புதான் சுவை மிக்க கனி தர முடியும். நாம் காத்திராதபடி பிஞ்சாக இருக்கும்போதே பறித்தால் பலன் இல்லை. முற்றுவதற்கு முன் பறித்தால் வெம்பி வீணாகி விடும். இதைப் போலவே நம் காரியங்களைச் செய்யும்போது, கால தாமதம் ஏற்பட்டால் கவலையும், கசப்பும் ஏற்பட்டு நமது உள்ளத்தில் பெலனற்ற வர்களாய் அவைகள் நம்மை மாற்றி விடுகிறது.

சிலர் வியாபாரத்தைச் செய்வார்கள். வியாபாரத்தில் மூன்று நான்கு ஆண்டு சென்றால் தான் கையில் போட்ட முதலை பெற வழி பிறக்கும். இந்த மூன்று ஆண்டு காலம் காத்திராது வியாபாரம் சரிப்பட வில்லை என்றும் நஷ்டம் என்றும் கூறி கடையையோ, வியாபாரத் தையோ, சரிவர பாராவிடில் நஷ்டம் ஏற்பட்டு வியாபாரம் பெலன் குன்றி விடும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமது காரியங்களை எந்த வேளை சித்திபெற கட்டளையிட வேண்டும் என்று அறிவார். அந்த வேளை வரை நாம் காத்திருக்கும் சமயம் தான் நாம் புதுப்பெலன் அடைய முடியும்.

கானாவூர் கலியாணத்தின்போது திராட்சரசம் குறைவுபட்டது. இயேசுவின் தாயார் குறைகளை நிறைவாக்க இயேசுவை அணுகினார். அவர் வேளை இன்னும் வராததினால் அந்தத் தாயாரின் விண்ணப்பத்தை உடனே நிறைவேற்றவில்லை. அந்த தாயாருக்கே இந்த நிலை என்றால் நாம் அதிகம் அவர் சமுகத்தில் காத்திருப்பது அவசியம் அல்லவா ?

இயேசு கிறிஸ்து ஊழியத்தைச் செய்ய, நாற்பது நாட்கள் உபவாசித்து, காத்திருந்து பலன் அடைந்தது போல, நாமும் கர்த்தரின் சமுகத்தில் காத்திருந்து புதுப்பெலன் அடைந்து ஆசீர்வதிக்கப் படுவோமாக.

2.கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருக்கும் போது அடைகிறோம் பெலன்

....கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்..."
நெகேமியா 8:10

நாம் எல்லாக் காரியங்களுக்காகவும் கர்த்தருடன் உள்ள ஐக்கியத்தில் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும். இன்று அநேகர் கர்த்தர் எனக்கு என்ன செய்தார் ? என் குடும்பத்தில் மட்டும் தான் அவதி. எனக்குத்தான் தோல்வி, எனக்குத்தான் வேதனை, நிந்தை என்று தங்களை உருவக்குத்திக் கொண்டு, தங்களது வாயினால் கர்த்தரைத் தூஷித்து, பெலன் குன்றி தேவக் கோபாக்கினைக்கு ஆளாகிறார்கள்.

இஸ்ரவேல் மக்களை எகிப்தில் இருந்து தம்முடைய வல்லமையுள்ள ஊழியர் மோசேயின் மூலம் மீட்டு வழி நடத்தினார். அவர்கள் தங்கள் மாம்ச இச்சையினாலும் பாவ சிந்தனையினாலும் வீணராகி, தாங்கள் தேவனால் அடைந்த, விடுதலையை எண்ணி மகிழ்ச்சியடையாதபடி ஊழியருக்கு விரோதமாக தேவனுக்கு விரோதமாக முறுமுறுக்க ஆரம்பித்தனர். ஆனாலும் அவர்கள் வாஞ்சித்த காரியம் அருளப்பட்டது. அதோடு வேதனையும் அடைந்தார்கள். கொடிய சத்துருக்கள் அவர்களை அழிப்பதற்கு கர்த்தர் அவர்களை ஒப்புக் கொடுத்தார்.

அன்பு சகோரனே, சகோதரியே, இதைப் போல நாம் நமது வாழ்வில் உள்ள குறைகளைக் குறித்துக் கவலைக் கொள்ளாது, கலங்கிடாதபடி கர்த்தர் நமக்குச் செய்த நன்மையான காரியங் களுக்காக நன்றியுடன் நாம் எப்பொழுதும் சந்தோஷமாயிருக்க வேண்டும். அது நமது ஆவி, ஆத்துமா, சரீரத்துக்குப் பெலன்.

ஒரு சகோதரி ஒரு முறை தனது வாழ்வின் நிலை உயர சமுகத்தில் 7 வாரம் உபவாசித்து வேண்டும் என்று கர்த்தரின் நடைபெறவில்லை என்றவுடன் கர்த்தரின் சமுகத்தில் முறுமுறுக்க ஜெபித்தாள். ஜெபித்தபின் அந்த மகள் வாஞ்சித்த காரியம் ஆரம்பித்தாள். அன்றிலிருந்து சரியாக ஜெபிப்பது கிடையாது. வேதம் வாசிப்பது கிடையாது. இதனால் அநேக வேதனையை அந்த மகள் அடைந்தாள். சரீரத்தில பெலவீனம் அடைந்தாள். பின்பு தனது முறுமுறுப்பு செயலை ஊழியர் ஒருவர் மூலம் உணர்த்தப்பட்ட போது, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட தன்னை மீண்டும் ஒப்புக் கொடுத்தாள். கர்த்தர் பெலத்தைக் கொடுத்து அவளை அதைவிட மேலான காரியங்களிலும் ஆசீர்வதித்தார்.'

இஸ்ரவேல் ஜனங்களின் முறுமுறுப்பினால் அவர்களை நடத்தின ஊழியர் தவறு செய்து தண்டனை அடைந்தார். நமது வாழ்விலும் எல்லாச் சூழ்நிலையிலும் கர்த்தர் தந்த நன்மைக்காக, சுகத்திற்காக, தொழிலுக்காக, பிள்ளைகளுக்காக நாம் மகிழ்ந்து காணப்பட்டால், ஆவியிலும் நாம் பெலன் அடைவதுடன் ஆசீர்வதிக் கப்படுவோம்.

எந்த நஷ்டம், தோல்வி, துக்கம் நம்மை அணுகினாலும் நாம் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக சந்தோஷமாக இருக்கும்போது நமக்குப் பெலன் ஈந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

ஒருமுறை ஒரு மலைப்பகுதிக்குச் சென்று இருந்தோம். மாலை 6 மணிக்குக் கூட்டம் என்று கூறிவிட்டபடியால் குறித்த நேரம் செல்ல முற்பட்டோம். எங்களுக்கு மதிய சாப்பாடு கொடுத்த இல்லத்தில் சற்று நேரம் தாமதம் ஆனபடியால், அந்தப் பகுதிக்கு செல்லும் ஒரே பஸ் சென்று விட்டது. கையில் எங்கள் பெட்டிகள். என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்போது நாங்கள் கர்த்தரைத் துதித்து இந்த உயரமான மலையில் ஏற எங்களுக்கு நீர் பெலன் தந்தபடியால் நன்றி என்று கூறிவிட்டு, சந்தோஷமாக எங்கள் சுமைகளைச் சுமந்து ஏற ஆரம்பித்தோம். கர்த்தர் 2 மணி நேரம் முன்னதாக சென்றிருக்க வேண்டிய வேனை அப்பொழுது அனுப்பினார்.

 நாம் கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாக இருக்கும்போது, அது தேவ பெலனாக மாறுவதுடன் நமது மனதின் வாஞ்சைகளையும், விருப்பத்தையும் கர்த்தர் நிறைவேற்றுவார்.

உன் வாழ்வில் பிள்ளைப்பேறு தாமதத்தினால், வேலை கிடைப்பதில் தாமதிப்பதினால், திருமண காரியம் தாமதிப்பதினால், உன் வியாபார காரியத்தின் நஷ்டத்தினால் மனம் சோர்ந்து உள்ள அன்பு சகோதரனே, சகோதரியே, இம்மட்டும் உன்னைப் பாதுகாத்து, போஷித்து, பராமரித்த உன்னதமான தேவனிடத்தில் அவர் செய்கைகளைக் குறை கூறாதப்படி நீ மனமகிழ்ச்சியாக இருப்பாய் என்றால், கர்த்தர் உன்னைப் பெலப்படுத்துவார். உன் மனதின் வாஞ்சைகளை நிச்சயமாய் நிறைவேற்றுவார். "நான் உன்னைப் பெலப்படுத்தி உனக்குச் சகாயம் செய்வேன்" - என்ற கர்த்தர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். அவர் இன்றும் ஜீவிக்கிறார்.

ஆகவே நாம் எல்லா சூழ்நிலையிலும் நமக்கும் கர்த்தருக்கும் உள்ள தொடர்பில் ஐக்கியத்தில் நாம் நிலைத்திருந்து, கர்த்தரின் செய்கைகளைக் குறித்து நாம் முறுமுறுக்காதபடி நம்மைக் காத்துக் கொண்டு யோபுவைப் போல் போராட்டத்தின் மத்தியிலும், நமது சிந்தையினாலும், நாவினாலும் குறை கூறாதப்படி கர்த்தரிடம் மகிழ்ச்சியாக இருப்போம். உன்னத பெலத்தை அடைவோம், ஆசீர்வதிக்கப்படுவோம்.

3. இயேசு கிறிஸ்துவின் நாமம் நம்மைப் பெலப்படுத்துகிறது

"அவருடைய நாமத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே அவருடைய நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனைப் பெலப்படுத்தினது...'அப்போஸ்தலர் 3:16

'இயேசு' என்ற நாமம் பெலப்படுத்துகிறது. இன்று சத்துருவின் கிரியைகளினால் பெலன் இழந்த மக்களைப் பார்த்து இயேசுவின் நாமத்தைச் சொல் என்றால், அந்த மக்கள் சொல்ல இயலாதபடி இருப்பதை எனது வாழ்வில் நான் நேரில் பார்த்து இருக்கிறேன்.

ஒருமுறை ஒரு வாலிப சகோதரன் ஒரு எஸ்டேட்டில் தனியாக வசித்து வந்தார். அவரது தாயார் அதிகமாக ஜெபிக்கிறவர்கள். ஆனால் அந்தச் சகோதரன் ஜெபிப்பதோ, இயேசுவின் நாமத்தை உச்சரிப்பதோ கிடையாது. ஒரு முறை அந்த மகனின் வீட்டில் மிகுந்த போராட்டம் நடைபெற்றது. இவன் வீட்டில் வைக்கும் பொருள் ஒன்றும் அதன் இடத்தில் இருப்பதில்லை. இவனைத் தவிர உயரமான அந்த அந்த இடத்தில் இவ்வாறு நடைபெற்றது. இந்தக் காரியம் மலைப்பகுதியில் வேறு ஒருவர் கூட அருகிலும், வீட்டிலும் இல்லாத அம்மகனுக்கு அதிக கலக்கத்தை உண்டுபண்ணியதாம். இரவில் தன்னைத் தட்டி எழுப்புவது போலவும், யாரோ அங்கும் இங்கும் உலாவுவது போலவும் உணர்ந்த அந்த சகோதரன், என்ன செய்வது என்று தெரியாது பயப்பட ஆரம்பித்தான். அவனது சரீரத்தை உரசிச் செல்லுகிற உணர்வுகள், என்ன செய்வது என்று புரியாத அவன் வேதப் புத்தகத்தை எடுத்து தலைமாட்டில் வைத்துக்கொண்டான். ஆயினும் தொடர்ந்து அந்தச் சம்பவங்கள் நடைபெற்றபடியால் தன்னை அறியாமலேயே தனது அம்மாவின் ஆலோசனைப்படி இயேசுவே என்று சொல்லச் சொல்ல அந்த அசுத்த ஆவிகள் வீட்டை விட்டு வெளியே ஓடுவதைக் காதினால் கேட்டான். அன்று முதல் அவன் எல்லா வேளையிலும் இயேசுவே என்று உன்னத தேவக் குமாரனின் நாமத்தை உச்சரிக்க ஆரம்பித்தான். ஆவியில் ஒரு புதிய பெலத்தைப் பெற்றான். பயம் அவனை விட்டு நீங்கியது. உள்ளத்தில் சமாதானத்தைப் பெற்றான். உள்ளத்திலும், சரீரத்திலும் பெலன் அடைந்தான்.

'நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய (இயேசு) நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவில்லை” என்ற வசனத்தை நாம் மறக்காது அவருடைய நாமத்தை அச்சடையாளமாய்த் தரித்து வாழ்வோம். இயேசுவின்

நாமம் நம்மைப் பெலப்படுத்த வல்லமை யுள்ளதாக உள்ளது. சத்துருவின்மேல் ஜெயங்கொள்ளவும் சகல போராட்டத்தின் மத்தியிலும் நம்மை ஆறுதல்படுத்தி, நம்மைப் பெலப்படுத்துகிற இந்த இயேசுவின் நாமத்தைத் தரித்த ஜனங்களாய் மாறுவோம்; பாக்கியவான்கள் ஆவோம்.

4. மனந்திரும்பி, கர்த்தரில் நம்பிக்கை வைத்து, அமர்ந்திருக்கும் போது பெலனடைகிறோம்

"நீங்கள் மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவீர்கள்; அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும்...”
ஏசாயா 30:15

கழுவப்பட்டு, நமது பாவங்கள் இயேசு கிறிஸ்துவின் விலையேறப் நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் பெற்ற இரத்தத்தால் கழுவப்பட்டது என்று விசுவாசம் அடைந்து, பழைய சுபாவங்களை நமது வாழ்வில் இருந்து அகற்றி பரிசுத்தமாக வாழ்ந்து, இயேசு கிறிஸ்து காண்பித்த முன் மாதிரியின்படி வாழ நமது வாழ்க்கையை மாற்றி, பொறுமையுடனும், நம்பிக்கையுடனும் நமது வாழ்க்கையை நடத்துவது நமக்குப் பெலனாக இருக்கும். நாம் நம்மை பலமுறை நீதிமான்கள் என்றும், பாவிகள் என்றும், ஆவியில், சிந்தனையில் மேலான எண்ணங்கள் நம்மை வேதனைப்படுத்தும் சிந்தனைகளை விட்டு நம்மைக் காத்துக்கொண்டு கர்த்தர் நம்மைப் பெலப்படுத்துவார் என்று நம்பிக்கையுடன் அமரிக்கையாக இருக்கும் போது, கர்த்தர் நம்மைப் பெலப்படுத்துவார்.

ஒரு முறை ஒரு வாலிப சகோதரன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு வாழ ஆரம்பித்தான். அவன் உள்ளத்தில் திடீர் என்று பாவ எண்ணங்களும், பாவச் சிந்தனைகளும் ஏற்பட்டது. நான் பாவம் செய்து விட்டேன், இனி வாழக் கூடாது என்று அவனது உள்ளம் பதற ஆரம்பித்து விட்டது. அதிக வேதனையுடன் காணப்பட்டான். அவனும் ஆவியில் பெலன் அற்றுக் காணப்பட்டான். அந்தச் சமயம் வேத வாக்கியங்களைப் பார்த்துக் கொண்டு இருந்தான். அவைகள் அவன் உள்ளத்தை ஆறுதல் படுத்தினது. அவனது சிந்தையும், ஆவியும் அமர்ந்தது. மீண்டும் அவன் ஏன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு விட்டு புதிய பெலத்தைப் பெற்று வாழ ஆரம்பித்தான்.

நாமும் பல உலகக் கவலையினாலும், பிரச்சனையினாலும் ஈர்க்கப்படாதபடி நாம் மனந்திரும்பினவர்களாய்ப் பாவ வழியை விட்டு திரும்பியவர்களாய் வாழும் சமயம், கிறிஸ்து எனக்கு ஜீவன் என்று நம்பிக்கையுடன் அமைதியாக இருக்கும் சமயம் ஆவியில் நாம் பெலன் அடைவோம். இந்த உன்னத பெலத்தைப் பெற்றபின், நாம் எதைக் குறித்தும் கவலைப்படமாட்டோம்.

5. பரிசுத்த ஆவி நம்மிடத்தில் வரும்போது,நாம் பெலனடைகிறோம்

"பரிசுத்த உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து...
அப்போஸ்தலர் 1:8

நாம் பரிசுத்தமாய் ஜீவிக்க, அனுதினமும் வழிநடத்தப்பட, எது பாவம், எது நன்மையானது, எது காத்தருக்குப் பிரியமான செயல் என்று நமது மாம்ச கண்களால் காண இயலாது. நாம் பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்போம் என்றால், நமது வாழ்வில் புதிய பெலத்தைக் கர்த்தருக்குள் பெற்று இருப்போம். என்னுடைய வாழ்க்கையே இதற்குச் சாட்சியாக சொல்லுகிறேன். பரிசுத்த ஆவி என்றால் என்ன? என்று அறியாத எனது வாழ்வில் தேவன் தம்முடைய குமாரன் மூலம் வாக்கருளின தேற்றரவாளனை எனக்கு அருளினார். வாழ்வில் மரணபயம் கொண்டு என்ன நடக்கும், என்ன செய்வது என்று ஏங்கிய எனது வாழ்வை, பரிசுத்த ஆவியானவர் மாற்றினார். என் ஆவி, ஆத்துமா, சரீரத்தைப் பெலப்படுத்தினார். வேதத்தை நேசியாத எனது வாழ்வு மாறி, கர்த்தரின் சத்தமாகிய இந்த வார்த்தையைக் குறித்து தாகமடைந்து அத்தோடு திடனற்றவர்கள் திடன் கொள்ள ஏற்ற ஞானத்தை, தைரியத்தைக் கொடுத்து என்னை அதிகமாய் பெலப்படுத்தினார்.

வேதத்தின் பல இடங்களில் கர்த்தர் பெலப்படுத்தினதை நாம் பார்க்கிறோம். சிம்சோன் ஒரு சாதாரன மனிதன். கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினபடியால் அவனுக்கு எதிர்ப்பட்ட பாலசிங்கத்தை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்து போடுவது போல கிழித்துப் போட்டான். இதைப்போல நாம் நமக்கு எதிராக செயல் படுகிற, கர்ஜிக்கிற சிங்கமான பிசாசினைக் கிழித்துப்போட, அதன் கிரியைகளை நிர்மூலமாக்க பெலம் உடையவர்களாக மாறி விடுவோம். எந்தப் பாவத்தை நாம் பயந்து செய்தோமோ அதை மேற்கொள்ள உன்னத ஆவி ஊற்றப்பட்டபடியால் பெலன் அடைந்து, மேற்கொண்டு விடுவோம். தண்டனைக்குப் பயந்து பொய் சொன்ன உனது வாழ்வில் பொய் சொல்லாது தண்டனைகளைச் சகிக்கக்கூடிய பெலன் அடைவாய். கடன் வாங்கியும் காரியங்களைச் சமாளிக்க முடியவில்லை என்ற உனது வாழ்வு கடன் வாங்காது வாழ ஒரு புதிய தெம்பைப் பெற்று இருப்பாய். இயேசு கிறிஸ்துவை மற்றவர்களுக்குச் சொல்ல தைரியமற்ற, வெட்கப்பட்ட உனது நாவு அவரைப் புகழ்ந்து அறிக்கை செய்ய பெலன் அடைந்திருக்கும். மற்றவர்கள் குறைகளைக் கண்டு பரிகசித்துப் பேசின உனது நாவும், சிந்தித்த மனமும் அவர்களுக்காக கர்த்தரிடம் பெருமூச்சுடன் மன்றாட ஆரம்பிக்கும். இந்தப் புதிய பெலனை, சத்துவத்தைப் பரிசுத்த ஆவியின் நிறைவால் பெறுவோம்.

ஒரு பெண்ணின் வார்த்தையினால் கலங்கி இயேசு கிறிஸ்துவை மறுதலித்த பேதுரு, பரிசுத்த ஆவியைப் பெற்ற பின்பு அதிகாரிகளையும், மூப்பர்களையும் அவர்கள் அக்கிரமச் செய்கைகளையும் உணர்த்தி நாம் எப்படி வாழவேண்டும் என்றும், இயேசுவைப் பற்றி தைரியமாகப் பேசவும் பெலன் அடைந்ததைப் பார்க்கிறோம். இது தேவனால் அருளப்பட்ட பெலன். இதினால் நாம் கர்த்தரின் ஊழியத்தைச் செய்யவுப் செய்யவும், செய்யவும், அற்புதத்தைச் செய்யவும் வல்லமையைப் பெற்று மற்றவர்கள் மத்தியில் வாழவும் உதவுகிறது.

ஆகவே, பரிசுத்த ஆவியானவர் உனது வாழ்வில், பெலனற்ற உனது ஆவி, ஆத்துமா, சரீரத்திலுள்ள பெலவீனத்தை அகற்றி உன்னைப் பெலப்படுத்தி, மென்மேலும் பெலன் அடையச் செய்வார். கால தாமதத்தைக் குறித்து கலங்காது, கர்த்தரின் சமுகத்தில் காத்திருந்து, கர்த்தரிடம் மனமகிழ்ச்சியாக இருந்து அவருடைய மேலான நாமத்தையே உச்சரித்து, அவருடைய நாமத்தைத் தரித்து மனந்திரும்பி, நம்பிக்கையுடன் அமரிக்கையாக பரிசுத்த ஆவியைப் பெற்று பெலமுள்ள மனிதனாக, இவ்வுலகப் பாடுகளையும், துன்பங்களையும், அநீதிகளையும், துக்கங்களையும் மேற்கொள்ள சத்துவம் பெற்ற மனிதனாக மாற கர்த்தர் உதவி செய்வாராக. “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லா வற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” என்ற நிலையை அடையச் செய்து, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                                                  கிறிஸ்து இயேசுவின் பணியில்,

                                                                               மறைந்த சகோ. C. எபனேசர் பால்.

(இந்தச் செய்தி 1993 ஏப்ரல் மாதத்தில் வெளியிட்டது)


E- STORE